சமீபத்தில் நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "ரவி மோகன் ஸ்டுடியோ" என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் லோகோ சமீபத்தில் வெளியான நிலையில், அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
இந்த புதிய படத்தில் ரவி மோகனுடன் நடிகர் எஸ்.ஏ. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குவது கார்த்திக் யோகி, இவர் முன்னதாக 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கியவர்.
இதில் இருவரும் ஹீரோக்கள் மட்டுமன்றி, நான்கு நாயகிகள் நடித்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதோடு, இரண்டு பான்-இந்தியா நடிகர்கள் வில்லனாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.