படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய LCU உலகத்தில் இணைக்கும் விதமாக கதையை எழுதியுள்ளார் லோகேஷ். கடந்த ஆண்டே இந்த படம் அறிவிக்கப்பட்டு விட்டாலும் தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நிவின் பாலி மற்றும் மாதவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதே போல கதாநாயகிகளாக பிரியங்கா மோகன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.