என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

vinoth

ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:12 IST)
இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா தமிழ் சினிமாவில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும் அவரால் முன்னணி இசையமைப்பாளராக வரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரே சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவரின் மகன் யத்திஸ்வரன் ஆன்மீக இசை ஆல்பம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவரது ஆல்பம் திருவண்ணாமலையில் வைத்து வெளியிடப்பட்டது. விரைவில் அவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் யத்தீஸ்வரன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “என்னைப் பார்க்கும் எல்லோருமே என் தாத்தாவைப் பற்றிதான் கேட்பார்கள். அவர் எப்படி இருக்கிறார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் கேட்பார்கள். என்னைப் பற்றிக் கூட கேட்க மாட்டார்கள். என்னிடம் பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா என்று தோன்றும்.’ என தன்னுடையத் தனித்துவம் குறித்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்