ஆனால் அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அந்த திரைப்படம் தொடங்கப்படவில்லை. படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற இயக்குனர் லெனின் பாரதி, அங்கு நடந்த மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். இதனால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதம் ஆனது.
இந்நிலையில் இப்போது அவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். தன்னுடைய இணை இயக்குனர் ராஜ்மோகன் என்பவர் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நான்கு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும், ஒரு முக்கியமான வில்லன் வேடத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்தில் சார்லி, காளி வெங்கட் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்துக்கு அர்ச்சுனன் பேரு பத்து என்ற வித்தியாசமானத் தலைப்பை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.