500 கோடி ரூபாய் கலெக்‌ஷனைக் கடந்த காந்தாரா-1.. 1000 கோடி ரூபாய் அடிக்குமா?

vinoth

சனி, 11 அக்டோபர் 2025 (09:20 IST)
சுமார் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட மொழியில் உருவானா ‘காந்தாரா’ திரைப்படம் இந்திய அளவில் பேன் இந்தியா ஹிட் ஆகி 400 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூலித்தது. அதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘காந்தாரா -1’ ரிலீஸாகியுள்ளது.

காந்தாரா கதைக்களம் நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் இந்த பாகத்தில் சொல்லப்பட்டுள்ளது.  முதல் பாகத்தின் வெற்றி காரணமாக சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த பாகம் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா ரிலிஸாக நேற்று ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்தியா முழுவதும் பல நகரங்களில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன.

படம் வெளியானதில் இருந்தே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது வசூலிலும் பிரதிபலிக்கிறது. முதல் பாகத்தின் மொத்தக் கலெக்‌ஷனையும் இரண்டாம் பாகம் முதல் வாரத்திலேயேக் கடந்துள்ளது. படம் முதல் வாரத்தில் மட்டும் 509.25 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்