என்னை நேஷனல் க்ரஷ்னு சொல்லும் போது மகிழ்ச்சியாகதான் இருக்கு… ஆனா? –ருக்மிணி வசந்த் பதில்!

vinoth

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (06:59 IST)
சமீபகாலமாக இந்திய சினிமாவில் கன்னட நடிகைகள் கோலோச்சுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே என நீளும் இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ளார் ருக்மிணி வசந்த். கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரடாச்சோ எல்லோ’ படம் மூலமாக கன்னட சினிமா தாண்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ருக்மிணி.

தற்போது காந்தாரா படம் அவரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளது. இதனால் சில ஆண்டுகளாக ராஷ்மிகாவை ‘நேஷனல் க்ரஷ்’ என அழைத்து வந்த ரசிகர்கள் தற்போது அதை ருக்மிணிக்கு வழங்கியுள்ளனர். தன்னை நேஷனல் கிரஷ் என அழைப்பது பற்றி ருக்மிணி பேசியுள்ளார்.

அதில் ” என்னை நேஷனல் கிரஷ் என அழைக்கும் போது அது மகிழ்ச்சியாகதான் உள்ளது. ஆனால் இதெல்லாம் தற்காலிகமானது. காலத்துக்கு ஏற்றார்போல மாறக்கூடியது.  ஆனால் மக்கள் என்னை ‘சப்த சாகரடாச்சா எல்லோ’ படத்தில் நடித்த பிரியா கதாபாத்திரத்தின் பெயரை சொல்லி அழைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்