லண்டனில் தொடங்கிய கங்கனா & மாதவன் பட ஷூட்டிங்!

vinoth

வியாழன், 14 மார்ச் 2024 (08:26 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

பாலிவுட்டைத் தவிர்த்து இப்போது கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் மாதவனோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்