கங்கனா & மாதவன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தம்… ஏன்?

vinoth

வெள்ளி, 1 மார்ச் 2024 (08:00 IST)
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

ஆனால் அவர் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. அந்தளவுக்கு கங்கனா மேல் ரசிகர்க்ளுக்கு வெறுப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல அவர் தமிழில் நடித்த படமான சந்திரமுகி 2 திரைப்படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதையடுத்து இப்போது கங்கனா நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை தமிழ் சினிமா இயக்குனர் ஏ எல் விஜய் இயக்குகிறார். இந்த படத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மாதவனும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். கங்கனாவின் படங்களுக்கு தொடர்ந்து மோசமான வசூல் கிடைப்பதால் சிறிது இடைவெளிவிட்டு இந்த படத்தை தொடங்கலாம் என்ற முடிவில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை தயாரிக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த அன்பபூரணி திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் பொருளாதார பிரச்சனைகளாலும் படம் தடைபட்டு நிற்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்