அயலான் ஹிட்டானாலும் லாபம் இல்லை… சிவகார்த்திகேயனிடம் ப்ரியா கால்ஷீட் கேட்கும் தயாரிப்பாளர்!

vinoth
சனி, 27 ஜனவரி 2024 (07:13 IST)
தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இயக்கத்தில் உருவான அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.

பொங்கலுக்கு ரிலீஸான இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. இதையடுத்து ரவிகுமார் இப்போது அடுத்து இயக்கும் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே ரவிகுமார் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் அயலான் திரைப்படம் வெற்றி பெற்றாலும் அந்த பட தயாரிப்பாளருக்கு லாபம் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் படத்தின் தாமதம்தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் சிவகார்த்திகேயன் தனக்கு இன்னொரு படம் சம்பளம் இல்லாமல் நடித்துத் தர வேண்டும் என கே ஜே ஆர் ராஜேஷ் சிவகார்த்திகேயனிடம் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்