அஜித்தை சந்தித்துக் கதை சொன்னாரா ‘மஹாராஜா’ பட இயக்குனர் நித்திலன்?

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (07:31 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றாலும் பெரிதாக வசூல் செய்யவில்லை. அதனால் அவர் தன்னுடைய அடுத்த படமான ‘மஹாராஜா’ வை உருவாக்க சில வருடங்கள் தாமதம் ஆனது.

விஜய் சேதுபதி நடிப்பில் அவர் இயக்கிய அந்த படம் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. திரையரங்குகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு  வசூலித்த ‘மஹாராஜா’ நெட்பிளிக்ஸில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் நித்திலன் தன்னுடைய அடுத்த படத்தில் நயன்தாராவை இயக்கவுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அஜித்தை சந்தித்து கதை சொல்லியுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்