அடுத்து சிம்புவுக்கு வில்லனாகும் பஹத் பாசில்…. எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (15:52 IST)
சிம்பு நடிப்பில் அடுத்து உருவாக உள்ள கொரோனா குமார் படத்தில்  பஹத் பாசில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் பஹத் பாசில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்