15 கோடி பார்வையாளர்களைத் தாண்டிய எஞ்சாயி எஞ்சாமி பாடல்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (11:59 IST)
தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் குரலில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி பாடல் மொத்தம் 15 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 15 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்