தனுஷ் படத்தின் ஷூட்டிங்குக்கு அனுமதி மறுப்பு… காரணம் என்ன?

vinoth
புதன், 31 ஜனவரி 2024 (10:01 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் திருப்பதியின் அலிபிரி பகுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. ஷூட்டிங்கைக் காண அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதால் திருப்பதி கோயிலுக்கு செல்லும் போக்குவரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று நெரிசலை சரி செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த படத்தின் ஷூட்டிங்குக்கான அனுமதியையும் ரத்து செய்துள்ளனர் போலீஸார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்