கதையே கேட்காமல் தனுஷ் ஓகே சொன்ன இயக்குனர்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (10:36 IST)
நடிகர் தனுஷ் இப்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறுகிய காலத்திலேயே தயாரித்து முடித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு பின்னர் மீண்டும் தனுஷ் சன் பிக்சர்ஸுக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை கமர்ஷியல் இயக்குனர் என அறியப்படும் சுந்தர் சி இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக குஷ்புவும் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதுவரை தனுஷ் எந்த இயக்குனரிடம் கதைக் கேட்காமல் நடித்ததில்லை. ஆனால் கமர்ஷியல் கிங்கான சுந்தர் சி மீது நம்பிக்கை வைத்து கதைக் கேட்காமலேயே ஓகே சொல்லியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்