கைவிடப்படும் நிலையில் இருந்த ‘சிம்பு 50’… அவர் கொடுத்த உற்சாகம்தான் .. தேசிங் பெரியசாமி நெகிழ்ச்சி!

vinoth
சனி, 1 மார்ச் 2025 (08:29 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ள ‘ஸ்வீதார்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தேசிங் பெரியசாமி “சும்மா ஒரு நாள் யுவன் சாரை சந்தித்து இந்த படத்தின் கதையை சொன்னேன். அவர் உடனே ‘எப்போது வேலைகளை தொடங்கலாம்?” என்றார். சிம்பு சாருக்கும் போன் செய்து பேசினார். அவர் தந்த அந்த உற்சாகம்தான் கைவிடப்படும் நிலையில் இருந்த இந்த படத்தை தொடங்க உதவியது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்