சக நடிகர் ரண்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தொடர்ந்து சினிமாவில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அட்லி- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகிவரும் பிரம்மாண்டமானப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஸ்பிரிட் மற்றும் கல்கி 2 ஆகிய படங்களில் இருந்து அவர் விலகினார் (அல்லது நீக்கப்பட்டார்). அதற்குக் காரணம் தினமும் 8 மணிநேரம் மட்டும்தான் பணியாற்றுவேன் என்று நிபந்தனை வைத்ததுதான் காரணம் என சொல்லப்பட்டது. இது குறித்தக் கேள்விக்குப் பதிலளித்துள்ள தீபிகா “இந்திய சினிமாவில் பல ஆண் நடிகர்கள் பல ஆண்டுகளாக 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அதே போல வார இறுதி நாட்களிலும் ஷூட்டிங் வருவதில்லை. ஆனால் நான் 8 மணிநேரம்தான் பணியாற்றுவேன் என சொன்னால் அது பெரிதாக செய்தியாக்கப்படுகிறது.
சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகைகள் சிலர் கூட 8 மணிநேரம்தான் பணியாற்றுகிறார்கள். அது கூட செய்தியாவதில்லை. இந்திய சினிமாவில் என்ன பிரச்சனையென்றால், அது வரையறுக்கப்பட்டு ஒழுங்காக செயல்படும் தொழில் அல்ல. அதை ஒழுங்கு படுத்தப்படும்.” எனக் கூறியுள்ளார்.