ரஜினி சாரை வைத்து வித்தியாசமாக எதுவும் பண்ண முடியாது… ஏ ஆர் முருகதாஸ் கருத்து!

vinoth

புதன், 20 ஆகஸ்ட் 2025 (10:03 IST)
ஷங்கருக்கு அடுத்து தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் இயக்குனராக உருவாகி வந்தார் முருகதாஸ். ஆனால் தர்பார், சிக்கந்தர் என அவரது அடுத்தடுத்த படங்கள் படுதோல்வி அடைந்து அவருக்கு ஒரு சிறு தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளன.

இப்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் அளித்த ஒரு நேர்காணலில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ரஜினி சார் போன்ற பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கும்போது நாம் புதிதாக எதுவும் பண்ண முடியாது. அவர் செய்ததிலேயே வித்தியாசமாக எதாவது பண்ணலாம். ஆனால் கமல் சார் போன்ற பெரிய நடிகரை வைத்தும் நாம் பரிசோதனை முயற்சிகளை பண்ணலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்