பிசாசு 2 படத்தின் அபார நம்பிக்கையில் ஆண்ட்ரியா… தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் கோரிக்கை!

சனி, 2 ஜூலை 2022 (17:26 IST)
நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று அபார நம்பிக்கையோடு இருப்பதாக தெரிகிறது.

பிசாசு 2 வெளியானால் மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கும் என்பதால் அடுத்தடுத்து கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தனது சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என்று சொல்லிவிட்டு அதன் பின்னர்தான் கதையே கேட்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்