“கடைசி நில நாட்கள் கனவு போல உள்ளது” … குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகை ப்ரணிதா

சனி, 11 ஜூன் 2022 (09:59 IST)
நடிகை பிரணிதா தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அறியப்படுபவர்.

நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில் பெங்களுருவில் திருமணம் நடந்துள்ளது. பிரணிதாவின் நீண்ட நாள் காதலரான நிதின் ராஜு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் கர்பப்மாக இருப்பதை  அறிவித்திருந்தார். அதையடுத்து அவரின் பல புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “எனது மகள் வந்ததில் இருந்து, கடைசி சில் நாட்கள் நம்ப முடியாத கனவு போல உள்ளது.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பிரணிதாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்