தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் படத் தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மார்கன் திரைப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய் ஆண்டனி காந்தாரா போன்ற கதைக்களத்தில் ஒரு படத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.