நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

vinoth

சனி, 15 பிப்ரவரி 2025 (16:13 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய கிஃப்ட் என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் ஒரு இணையத் தொடரில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இந்த தொடரில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறாராம். இந்த தொடருக்கு லெகஸி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்