குடும்ப உறுப்பினரை இழந்த சோகத்தில் மீரா ஜாஸ்மின்!

vinoth

சனி, 6 ஏப்ரல் 2024 (10:36 IST)
தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதையடுத்து தமிழில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோரோடு ‘தி டெஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தந்தை ஜோசப் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதை அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்