பெரிய பாய் என்ற பெயர் எனக்கு வேண்டாம்.. நான் என்ன கசாப்புக் கடையா வச்சிருக்கேன்? – ஏ ஆர் ரஹ்மான்

vinoth

செவ்வாய், 20 மே 2025 (09:58 IST)
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். இது சம்மந்தமாக ரஹ்மான் மீது சில அவதூறுகள் வீசப்பட்டன. அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து ஒரு சிறு இடைவெளியை எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் தக்லைஃப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணலில் தன்னை ‘பெரிய பாய்’ என்று அழைப்பது சம்மந்தமாக நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலில் தொகுப்பாளினி ரஹ்மானை ‘பெரிய பாய்’ என்று அழைக்க, அதற்கு “அந்த பெயர் வேண்டாம். எனக்குப் பிடிக்கல. நான் என்ன கசாப்புக் கடையா வச்சிருக்கேன்” என ஜாலியாகப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்