''ஜெயிலர்'' படத்தை 3 முறை பார்த்த ஜப்பான் ரசிகர்....

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (17:43 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினி காந்த். இவர் நடிப்பில்நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம்  முதல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று  ரூ.350  கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரஜினியின் முத்து என்ற படத்திலிருந்து,  நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான ஜப்பான் ரசிகர் யசுதா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி திரைப்படத்தின் ஓபனிங் ஷோ பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், ஜெயிலர் பட ரிலீஸின் முதல் காட்சிக்காக  தன் மனைவியுடன் சென்னை வந்துள்ளார். இவர், இன்று மீண்டும் ஜப்பானுக்கு கிளம்புகிறார்.

இதுபற்றி அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  ஜெயிலர் படத்தை காசி, ஆல்பெர்ட், ரோகினி ஆகிய 3 தியேடர்களில்  3 முறை பார்த்துவிட்டேன்.  நன்றி தலைவா மகிழ்ச்சி என்று ஒரு பதிவிட்டுளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்