3வது டி20 போட்டியிலும் வெற்றி.. தொடரை வென்றது மே.இ.தீவுகள் அணி..!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (07:59 IST)
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடரை வென்றுள்ளது. 
 
முதல் டி20 போட்டிய்யில் மே.இ.தீவுகள் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தது. 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து மேற்கிந்த தீவுகள் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
மேலும் இந்த தொடரையும் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்