இன்றைய போட்டியில் விராத் கோஹ்லி செய்த சாதனை!

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:39 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சிட்னி மைதானத்தில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணியின் சற்று முன் வரை 13 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 3000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் 3000 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது 3000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராத் கோஹ்லி பெற்றுள்ளார்
 
ஆஸ்திரேலிய மண்ணில் 2 இந்திய வீரர்கள் 3000 ரன்கள் எடுத்துள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்