டிஎன்பிஎல் கிரிக்கெட்: மதுரை அணி எளிய வெற்றி.. ஒரு புள்ளி கூட எடுக்காத திருச்சி..!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:58 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று திருச்சி மற்றும் மதுரை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. 
 
சேலம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி மோசமாக விளையாடி 18.5 ஓவர்களில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து 106 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணியின் 17 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை 108 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் மதுரை அணி 6 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது
 
ஆனால் திருச்சி அணி இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசி இடத்தில் பரிதாபமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்