513 ரன் எடுத்த வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (08:05 IST)
வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31ஆம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வங்க தேசம் 513 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. நேற்றைய 3வது நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 504 ரன்கள் குவித்துள்ளது. மெண்டிஸ் 196 ரன்களும், டிசில்வா 173 ரன்களும் குவித்தனர்.

இன்னும் இரண்டு நாள் மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டி எப்படி முடியும் என்பதை எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்