கோலியின் ஓய்வு முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கோலி பற்றி பேசும்போது “கோலி இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பேரிழப்பு. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அந்த அளவுக்கு விரும்பினார். அவர் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்தில் 0-5 என்ற கணக்கில் தோற்றால், இந்திய அணி நிர்வாகம் அவரை மீண்டும் அழைத்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவார் என்றுதான் நான் நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.