சி எஸ் கேவை ஜெயிக்கனும்னா 40 ஓவரும் நல்லா விளையாடனும்… சேவாக் கருத்து!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:21 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

நடப்புத் தொடரில் சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. துபாயில் நடந்த 3 போட்டிகளிலும் வென்று அசுர பலத்தோடு உள்ளது. இந்நிலையில் சென்னை அணியை வெல்வது குறித்து இந்திய முன்னாள் வீரர் சேவாக் பேசியுள்ளார்.

அதில் ‘சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடும் போது அவர்களை வெல்வது கடினம். ஆனால் அவர்களின் பவுலிங் பலவீனமானது என்பதையும் கூறவேண்டும். அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. 10 ஆவது பேட்ஸ்மேன் வரை விளையாடுவார்கள். சி எஸ்கே அணியை வெல்ல வேண்டும் என்றால் நாம் 40 ஓவர்களும் சிறப்பாக விளையாட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்