அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் சிறப்பானத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ராகுல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, இந்த போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஜோடி சிறப்பான இன்னிங்ஸைக் கட்டமைத்தது.
இருவரும் சதமடித்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்களில் அவுட் ஆக, கில் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த இன்னிங்ஸின் போது ஜெய்ஸ்வால் மற்றும் கில் இடையே நடந்த உரையாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் ஜெய்ஸ்வால் கில்லிடம் உனக்கு ரன் ஓட விருப்பம் இல்லை என்றால் சத்தமாக வேண்டாம் என்று சொல். எனக்கு பந்தை அடித்தவுடன் ஓடும் பழக்கம் உள்ளது” என சற்று காட்டமாகக் கூறினார். இந்த உரையாடல் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.