தமிழக அணியிலிருந்து வெளியேறினார் முரளி விஜய்!!

Arun Prasath

செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:01 IST)
காயம் காரணமாக முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து முரளி விஜய் வெளியேறினார்.

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக எம்.சித்தார்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் 37 அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்