டாஸ் வென்ற மும்பை.. கேப்டன் மாற்றத்தால் மும்பை அணியில் பரபரப்பு..!

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (15:05 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 22 வது போட்டி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட உள்ளார். 
 
மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து சூரியகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் மாற்றத்தால் மும்பை அணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் இன்றைய போட்டியின் போடப்பட்ட நிலையில் மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார்  யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை மும்பை அணி ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா இரண்டு வெற்றிகள் வெற்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்