இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரே அவர்களின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பையை வென்ற இந்த இரண்டு முன்னணி வீரர்களும், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது, இந்திய அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.