அணியில் திடீரென இணைந்த வீரர் – கூடுதல் பலத்தோடு களமிறங்கும் ஆஸி!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (07:22 IST)
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் தொடரில் மீண்டும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நாளை மறுநாள் முதல் தொடங்கும் 4 போட்டிகள கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி 3 போட்டிகளில் இருக்க மாட்டார் என்பது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் ஆஸி அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தங்கள் முழு பலத்தோடு களமிறங்க உள்ளது.

இந்நிலையில் டி 20 தொடரில் இருந்து குடும்ப சூழல் காரணமாக விலகிய மிட்செல் ஸ்டார்க் டெஸ் தொடரில் மீண்டும் இணைந்துள்ளார். இதை அந்த அணியின் சக வீரர் ஜோஷ் ஹேசில்வுட் உறுதி செய்துள்ளார். இதனால் ஆஸி அணி மேலும் பலமடைந்துள்ளது. அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்