அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!

ஞாயிறு, 2 ஜனவரி 2022 (17:52 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் அது மட்டுமின்றி ஒரு சில பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது அவர் சீராகவும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
 
இன்னும் ஒரு சில நாட்களில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்று டாக்டர்கள் கூறியதை அடுத்தே மெஸ்ஸியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்