அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு இந்தியா தகுதி!

செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:16 IST)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது
 
இந்த தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் உள்ளது இந்த பிரிவில் நியூசிலாந்து, இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் உள்ளன என்பதும், இந்திய அணி மூன்று அணிகளையும் வென்று ஆறு புள்ளிகள் எடுத்து உள்ளதை அடுத்து இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி ஒன்றில் இந்திய அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்