3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

Webdunia
ஞாயிறு, 23 ஜனவரி 2022 (14:11 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்தான் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் ஒயிட்வாஷ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்
 
புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ள கே எல் ராகுலுக்கு இந்த போட்டி மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்