இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இன்று ஐந்தாம் நாளில் இங்கிலாந்து அணி 350 ரன்கள் சேர்க்க வேண்டும். கையில் 10 விக்கெட்கள் வைத்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இதுவரை தோற்றுள்ளது. 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த போட்டிகளில் 42 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் சமனும் செய்துள்ளது.