ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் இவர்தான்: இடம் பிடித்த மற்ற வீரர்கள் யார் யார்?

ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:49 IST)
ஐசிசியின் கனவு அணியின் கேப்டன் இவர்தான்:
ஐசிசி கனவு அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
கடந்த பத்து வருடங்களுக்கான டி20 கிரிக்கெட் கனவு அணியை ஐசிசி அறிவிப்பு செய்துள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் கனவு அணியின் கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐசிசி அறிவித்துள்ள கனவு அணியில் இடம் பெற்ற வீரர்கள் பின்வருமாறு: ரோஹித் சர்மா, கெய்லே, ஃபின்ச், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், தோனி, பொல்லார்டு, ரஷித்கன், பும்ரா, மலிங்கா
 
இந்த அணியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்