பொது மேடையில் இந்திய வீரரை அடிக்க பாய்ந்த வீரர் (வீடியோ)

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (11:09 IST)
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்சானியா நாட்டின் குத்துச்சண்டை வீரர் பிரான்சிஸ் செகா, இந்திய வீரர் விஜேந்தர் சிங்குடன் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
விஜேந்திர சிங்கும் தன்சானியா நாட்டு வீரரும் மோதவுள்ள தொழில்முறை குத்துசண்டை போட்டி வரும் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
 
இந்நிலையில், இருவரும் பங்கேற்ற பத்திரக்கையாளர் சந்திப்பின் போது தன்சானியா வீரர் விஜேந்திர சிங்குடன் திடீரென மோதலில் ஈடுபட்டார்.
 
அதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய விஜேந்தர் சிங் எனக்கு எதிராக களத்தில் யார் வந்தாலும் அவரை நிச்சியம் வீழ்த்துவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது என்னுடன் மோதலில் ஈடுபட்ட பிரான்சிஸ் செகாவை நாக் முறையில் வீழ்த்தி வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால் பிரான்சிஸ், விஜேந்திர சிங் என்னுடன் மோதிய பிறகு பாக்ஸிங்கை பற்றியே யோசிக்க மாட்டார் என்று சவால் விடுத்துள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்