ஆஸ்திரேலியா பந்துவீச்சை பிரித்து மேந்த ஆப்கானிஸ்தான்.. இமாலய இலக்கு..!

செவ்வாய், 7 நவம்பர் 2023 (17:51 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற நிலையில் இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சை பிரித்து மேய்ந்ததன் காரணமாக இமாலய இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் மிக அபாரமாக விளையாடினர்.. அந்த அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்  இப்ராஹிம் 129 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து 292 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ள நிலையில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்