எழில் மிகு கர வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான நந்தன வருடம் பிறந்துள்ளது. 13.4.2012 வெள்ளிக் கிழமை மாலை மணி 5.37க்கு கிருஷ்ண பட்சத்து அஷ்டமி திதி, உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதம், தனுசு ராசி கன்னியா லக்னம் 4-ம் பாதத்தில், நவாம்சத்தில் சிம்ம லக்னம் தனுசு ராசியில், சித்தி நாம யோகத்தில் கௌலவம் நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம், ஜீவனம் கூடிய நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் கடைசி சாமத்தில் கோழி பலமிழந்த நேரத்தில் சூரிய தசையில், சந்திர புக்தியில், சனி அந்தரத்தில், குரு ஓரையில் நந்தன வருடம் சீரும் சிறப்புமாக பிறந்துள்ளது.