த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு ரா‌சி பல‌ன் : மேஷம்

சனி, 21 ஏப்ரல் 2012 (18:38 IST)
FILE
தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! யார் மனதும் நோகாமல் பேசும் நீங்கள், சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு கோடை மழையாக கொட்டுவீர்கள். அரசன் முதல் அடி மட்டத் தொண்டன் வரை அனைவரின் திரைமறைவு வேலைகளையும் சுட்டிக் காட்டிப் பேசி தப்பென உணர்த்துவதில் வல்லவர்கள். தாயா தாரமா என்ற தடுமாற்றம் உங்களுக்கு அடிக்கடி வரும். சடங்கு, சம்பிராதயங்களை விட சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

இந்த நந்தன ஆண்டு உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் உதிப்பதாலும், ஒன்பதாவது ராசியில் பிறப்பதாலும் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். அழகு, ஆரோக்யம் மேம்படும். கடினமான இலக்கையும் எளிதாக எட்டிப் பிடிப்பீர்கள். கடன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற அடிப்படை வசதிகள் பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். இடைவிடாமல் உழைத்தும் எதுவும் ஒட்டவில்லையே என வருந்தினீர்களே! இந்த ஆண்டில் பணபலம் கூடும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப வளைந்து கொடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்கள் மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். உறவினர்கள், நண்பர்கள் வியக்குபடி கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லையே, என்று வருந்தினீர்களே! கவலை வேண்டாம். இனி பாசமாக பேசுவார்கள். சொத்துப் பிரச்சனைகளில் அனுகூலமான நிலை உருவாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

17.5.2012 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கும். புது முயற்சிகள் வெற்றியடையும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி பிறக்கும். குழந்தை இல்லையென வருந்திய தம்பதியர்களின் கவலையை போக்கும் வகையில் அழகான வாரிசு உருவாகும். காற்றோட்டம், வெளிச்சம் இல்லாத வீட்டை மாற்றி அமைதியான சூழல் உள்ள வீட்டிற்கு குடிபுவீர்கள். சிலர் புது வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். அரசியலில் ஆர்வம் பிறக்கும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள்.

கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். இனி மாற்றுவீர்கள். உற்றார் உறவினருடன் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். விலையுயர்ந்த ரத்தினங்கள், அணிகலன்கள் வாங்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

13.4.2012 முதல் 11.9.2012 வரை சனி 6-ல் நிற்பதால் வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். உங்களின் உதவியால் வளர்ச்சியடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பழமை வாய்ந்த வெளிமாநில புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு சொந்தம் பந்தங்களின் வருகையால் வீடு நிறைந்திருக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. ஆனால் 12.9.2012 வருடம் முடியும் வரை 7-ல் கண்டகச் சனியாக அமர்வதால் சிறுசிறு வாகன விபத்துகள், ஏமாற்றங்கள், பணயிழப்புகள் வந்துப் போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

17.10.12 முதல் 15.11.12 வரை சூரியன் சனியுடன் சேர்ந்திருப்பதால் இக்காலக்கட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். 2.12.2012 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் கேது நிற்பதால் தலைச்சுற்றல், முன்கோபம், எதிலும் ஒருவித சலிப்பு வந்து நீங்கும். வாயுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இரும்பு, சுண்ணாம்புச் சத்துள்ள காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 2.12.2012 முதல் 7-ல் ராகுவும் நுழைவதால் மனைவியுடன் கருத்துவேறுபாடு, மன உளைச்சல், காரியத் தடைகள், எதிலும் ஈடுபாடற்ற நிலை வந்து போகும்.

கன்னிப்பெண்களே! கசந்த காதல் இனிக்கும். முகப்பரு, தோலில் நமைச்சல் நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும். தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். உயர்கல்வி அயல்நாட்டில் உண்டு. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள்.

மாணவ-மாணவிகளே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த்தபடி அதிக மதிப்பெண்ணுடன் வெற்றிபெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசுபாராட்டுகளை பெறுவீர்கள்.

வியாபாரிகளே! செய்யமுடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். வைகாசி, ஆனி மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வராது என்றிருந்த பாக்கி வந்து சேரும். புது வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். புதிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திக்குமுக்காட வைப்பீர்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. வேலையாட்கள் உறுதுணையாக இருப்பார்கள். மருந்து, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் வகைகளால் ஆதாயமுண்டு. வருட ஆரம்பம் முதல் 11.9.2012 வரை 6-ல் சனி நீடிப்பதால் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். 12.9.2012 முதல் சனி 7-ல் அமர்வதால் பங்குதாரர்களுடன் அவ்வப்போது கருத்து மோதல்கள் வரக்கூடும். கடன் தர வேண்டாம்.

உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். மேலதிகாரியுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும். 17.5.2012 முதல் குரு 2-ல் அமர்வதால் வேலைச்சுமை குறையும். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். பெரிய பதவிக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள்-. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரிகள் உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும். புது சலுகைகளும் உண்டு. உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு மதிப்பளிப்பார்கள். என்றாலும் 12.9.2012 முதல் சனி 7-ல் அமர்வதால் அலுவலக விஷயங்களை கவனமாக கையாளுங்கள். மூத்த அதிகாரிகள் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் யோசிப்பது நல்லது. கணினி துறையினர்களே! இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

அரசியவாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தெரிவியுங்கள். தலைமைக்கு நெடுக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். சகாக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். அரசு கவுரவிக்கும். மூத்த கலைஞர்கள் உங்களுக்காக பரிந்து பேசுவார்கள். வீண் வதந்திகள் விலகும்.

விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும்.

இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும், வசதி, வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
சூரியனார் கோவில்.நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயுளிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்