ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி சென்ற வடமாநில இளைஞர்: பர்கூரில் பரபரப்பு

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (14:14 IST)
ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசி சென்ற வடமாநில இளைஞர்: பர்கூரில் பரபரப்பு
பர்கூரில் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற வடமாநில இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வட மாநில இளைஞர் ஒருவர் கையில் கத்தை கத்தையாக ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார் 
 
இதை பார்த்த பொதுமக்கள் சந்தேகமடைந்து அந்த வாலிபரை விசாரணை செய்தபோது திடீரென அவர் பணத்தை சாலையில் வீசி சென்று விட்டு ஓடினார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்
 
 வடமாநில மாநில மாநில இளைஞர் என்பதால் இந்தியில் மட்டும் பேசினார். மேலும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்