ரஜினி வீட்டு வாசலில் திருநங்கைகள் தர்ணா: பஞ்சாயத்து செய்த லதா ரஜினி!

ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:52 IST)
போயஸ் கார்டன் ரஜினி வீட்டு வாசலில் திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். 
 
இந்நிலையில், கரோனா நிவாரணம் கேட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகா் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தினா். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து லதா ரஜினி, தனது வீட்டின் காவலாளி மூலம் ரூ.5,000 திருநங்கைகளிடம் வழங்கினாா். பின்னர் திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்