குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் குளிக்க தடை..! சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

செவ்வாய், 4 ஜூலை 2023 (16:21 IST)
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
குற்றாலத்தில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவி வருகிறது. இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்திலிருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர் 
 
இந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்தருவி பழைய குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இருப்பினும் சீசன் சூப்பராக இருப்பதை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்