களைகட்டும் குற்றால சீசன்.. குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்..!

திங்கள், 3 ஜூலை 2023 (08:41 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால சீசன் சிறப்பாக இருக்கும் என்பதும், அப்போது சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதும் தெரிந்ததே. 
 
அந்த வகையில் தற்போது தற்போது குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளதை அடுத்து உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர். 
 
நேற்று குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டியதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று தண்ணீர் குறைந்து சீசன் சூப்பராக உள்ளது. இதனை அடுத்த சுற்று பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக அனைத்து அருவிகளிலும் குளித்து வருகின்றனர். குறிப்பாக மெயின் அருவி ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகளும் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்