அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் ஆவணி திருவிழா விசேசமானதாகும், 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தரிசனத்திற்காக வருகை தருவர்.
முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வரும். அதை தொடர்ந்து வள்ளியம்மாள் தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வர உள்ளது. இரவு பல்லக்கில் 8 வீதி உலா நடைபெற உள்ளது.