மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் இருப்பது உண்மையாகவே அதிர்ச்சி அளிக்கிறது என்றும், ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால், அது தேசத்திற்கான பின்னடைவாக தான் பார்க்கப்படும் என்றும், நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியை சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.